/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூலை 24, 2025 02:03 AM

பெருமாள்பட்டு:குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளதால், 10க்கும் மேற்பட்ட பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையோரம், எல்.வி.பி., காலனி, முல்லை நகர், மகாலட்சுமி நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில், திருக்கண்டீஸ்வரர் கோவில் எதிரே உள்ள சாலை சேதடைந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளது. இச்சாலை வழியாக செல்லும் பகுதிமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், அவசர மருத்துவ தேவைககு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சாலையை சீரமைக்க பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, பல்லாங்குழியான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.