sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 குளமான இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

/

 குளமான இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 குளமான இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி

 குளமான இணைப்பு சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி


ADDED : நவ 12, 2025 10:14 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை குளமாக மாறியதால், வாகனங்கள் கழுவும் இடமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் விரிவாக்க பணிகள் துவங்கியது. இதில், திருமழிசை, செம்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம் உட்பட பல பகுதிகளில் இணைப்பு சாலை பணி மந்தகதியில் நடந்து வருகிறது.

திருமழிசை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள இணைப்பு சாலையில், மழைநீர் கால்வாய் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனால், சமீபத்தில் பெய்த மழையால், இணைப்பு சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கழுவி வருகின்றனர். இதனால், சாலை குறுகி, மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us