/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடைகள் சாலையில் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
கால்நடைகள் சாலையில் உலா அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 03, 2025 01:02 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள கொண்டஞ்சேரி - திருப்பாச்சூர் நெடுஞ்சாலை வழியாக, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.
இதனால், வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருவதோடு, அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
கலெக்டர் மற்றும் எஸ்.பி., உத்தரவிட்டும், நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடடிக்கையும் எடுக்காதது வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

