/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாலையோரம் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 21, 2025 03:50 AM

திருமழிசை: சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் வண்டல் மண் படலத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கும், அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், தண்டலம், செட்டிபேடு ஆகிய பகுதிகளில் பக்கவாட்டு தடுப்பு பகுதியில் வண்டல் மண் படலம் அதிகமாக படிந்துள்ளது.
இந்த வண்டல் மண் படலத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து வண்டல் மண் படலத்தை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

