/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் கம்பங்களில் விளம்பர பேனர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மின் கம்பங்களில் விளம்பர பேனர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மின் கம்பங்களில் விளம்பர பேனர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மின் கம்பங்களில் விளம்பர பேனர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 31, 2025 02:00 AM

திருவள்ளூர்:நெடுஞ்சாலையில் பேனர், கொடிக்கம்பங்கள் வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், விளம்பர பேனர்கள் வைப்பது, தற்போதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், தற்போது நெடுஞ்சாலை மையத் தடுப்பு மற்றும் சாலையோர மின் கம்பங்களில், எவ்வித அனுமதியும் பெறாமல், விளம்பர பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்களால், வாகனங்களில் செல்வோர் கவனம் சிதறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேலும், மின் கம்பங்களில் விளம்பரங்கள் வைப்பதால், மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களில் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, நெடுஞ்சாலை மையத் தடுப்பு மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி கூறியபோது, ”நெடுஞ்சாலையில் மையத்தடுப்பு மற்றும் சாலையோர மின் கம்பங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.