sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தனியார் நிறுவன வாகனங்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

தனியார் நிறுவன வாகனங்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தனியார் நிறுவன வாகனங்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தனியார் நிறுவன வாகனங்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 17, 2025 09:29 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவில், தனியார் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது பயன்பாட்டு பேருந்துகள் நிலையம் மற்றும் நிறுத்தங்களில் மட்டும் நின்று, பயணியரை ஏற்றி செல்கின்றன.

ஆனால், தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள், ஒவ்வொரு ஊரிலும் தெருவுக்கு தெரு நடுரோட்டிலேயே நின்று, மாணவர்கள் மற்றும் பணியாளர்களை ஏற்றி செல்கின்றன. நடுரோட்டில் நிறுத்தப்படும் பேருந்துகளின் ஓட்டுனர்கள், எந்தவித சிக்னலும் காண்பிப்பது இல்லை.

திடீரென நடுரோட்டில் நிறுத்தப்படும் பெரும்பாலான பேருந்துகளில் எச்சரிக்கை சிக்னல் விளக்குகளும் எரிவது இல்லை. இதனால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

திருத்தணி வட்டார போக்குவரத்து ஆய்வாளர், பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேருந்துகளின் ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us