/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையோரம் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
/
நெடுஞ்சாலையோரம் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையோரம் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
நெடுஞ்சாலையோரம் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 23, 2024 01:46 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரமாகும் இரண்டு டன் குப்பை சேகரமாகி வருகிறது.
இதையடுத்து வெள்ளேரிதாங்கல் செல்லும் சாலையில் அரசு நிலத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 24 லட்சம் மதிப்பில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த உரங்கிடங்கு அருகே உள்ள கன்னியம்மன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால் உரக்கிடங்கு பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
இதையடுத்து ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் அரசு நிலத்தில் குப்பை குவித்து வைக்கப்படுகிறது.
இந்த குப்பை அவ்வப்போது கொடுங்கையூர் கிடங்கிற்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது நெடுஞ்சாலையோரம் மலைபோல் குவிந்து வரும் குப்பையால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில நேரங்களில் இந்த குப்பையில் கால்நடைகள் இரை தேடும் வரும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் வெங்கத்துார் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

