sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோரம் பழமையான மரங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணம்

/

சாலையோரம் பழமையான மரங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணம்

சாலையோரம் பழமையான மரங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணம்

சாலையோரம் பழமையான மரங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணம்


ADDED : மார் 05, 2024 06:29 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போளிவாக்கம், போளிவாக்கம் சத்திரம், செங்காடு, தொடுகாடு உட்பட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து, கனரக வாகனம் என, தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் வேப்பம், புளி, ஆலம், வேங்கை என, 100க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இவை பழமையான நிலையில் உள்ளதால் பல மரங்களின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகின்றன.

இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் சாலையோரம் சேதமடைந்து உள்ள மரத்தினால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் அரசு பேருந்து, கனரக லாரி என, 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கின.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் நெடுஞ்சாலையோரம் உள்ள பழமையான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us