sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளி நுழைவாயிலில் கதவு இல்லை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

/

பள்ளி நுழைவாயிலில் கதவு இல்லை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

பள்ளி நுழைவாயிலில் கதவு இல்லை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

பள்ளி நுழைவாயிலில் கதவு இல்லை மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி


ADDED : அக் 06, 2025 11:11 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர், அரசு பள்ளி வளாகத்தின் நுழைவாயிலில் கதவு இல்லாததால், கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் இரண்டு கட்டடங்களில் நான்கு வகுப்பறைகள் உள்ளன. கட்டடங்களை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில், நுழைவாயிலில் இரும்பு கதவு பொருத்தப்படாமல் உள்ளது.

திறந்த நிலையில் உள்ள நுழைவாயில் வழியாக கால்நடைகள், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, அங்கேயே ஓய்வெடுத்து வருகின்றன.

மேலும், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், பள்ளி வளாகத்தை மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி வருவதுடன், பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, உடனே பள்ளி வளாகத்தின் நுழைவாயிலில் இரும்பு கதவு பொருத்த, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us