ADDED : ஜன 02, 2026 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணியில் மூதாட்டி உடல் மீட்கப்பட்டது.
திருத்தணி - அரக்கோணம் சாலை காட்ரோடு பகுதியில் நேற்று காலை, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

