நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலிப்குமார் பரிதா, 42. கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி பைபாஸ் நோக்கி சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.