/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூர் ஏரிக்கரை சீரமைக்க உத்தரவு
/
காக்களூர் ஏரிக்கரை சீரமைக்க உத்தரவு
ADDED : மார் 27, 2025 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த காக்களுர் ஆவின் பால் பண்ணையில் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
தயிர், மோர் தயாரிப்பு கூடம், பால் பாக்கெட் தயாரிப்பு கூடம், ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் உற்பத்தி செய்யப்படுவது குறித்து, அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
பின், காக்களுர் ஏரியை பார்வையிட்ட அவர், ஏரியைச் சுற்றியும் சேதமடைந்த நடைபாதையினை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, பொதுப்பணித் துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
ஆவின் பொது மேலாளர் நாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.