sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இன்று படித் திருவிழா: நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம் நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம்

/

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இன்று படித் திருவிழா: நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம் நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம்

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இன்று படித் திருவிழா: நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம் நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம்

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இன்று படித் திருவிழா: நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம் நள்ளிரவில் புத்தாண்டு தரிசனம்


ADDED : டிச 31, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 31, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டன. ஒராண்டிற்கு, 365 நாட்களை குறிக்கும் வகையில் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஆண்டுதோறும், டிச.31ம் தேதி, திருப்படித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று, திருப்படித் திருவிழா நடக்கிறது. படித் திருவிழாவின் போது கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், இந்த மலைக்கோவிலுக்கு வந்து பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு நடந்து சென்று வழிப்படுவர்.

இன்று, நண்பகல், 11:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இன்று, நள்ளிரவு 12:01 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து, ஜன.,1ம் தேதி இரவு, 9:00 மணி வரை புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். முன்னதாக, இரவு 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் தங்கத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருத்தணி டி.எஸ்.பி.,கந்தன் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us