sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளியை திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

/

கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளியை திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளியை திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளியை திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு


ADDED : நவ 24, 2024 02:52 AM

Google News

ADDED : நவ 24, 2024 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் குடிகுண்டா அரசு தொடக்கப் பள்ளியில், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கட்டடம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்டது.

போதிய பராமரிப்பு இல்லாததால் பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பள்ளிகட்டடத்தை இடித்துஅகற்றினர்.

மேலும். அதே இடத்தில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாயில், புதியதாக இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டி முடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது.

ஆனால் புதிய பள்ளி கட்டடம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளதால் மாணவர்கள் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் படித்து வருகின்றனர்.

அங்கு மாணவர்களுக்கு போதிய இட வசதியும், கழிப்பறை வசதியின்றியும் அவதிப்படுகின்றனர்.

எனவே மாணவர்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் குடிகுண்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு தொடக்கப் பள்ளியை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us