/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்நிலை குடிநீர் தொட்டி பழுது பிரையாங்குப்பம் பகுதியினர் அவதி
/
மேல்நிலை குடிநீர் தொட்டி பழுது பிரையாங்குப்பம் பகுதியினர் அவதி
மேல்நிலை குடிநீர் தொட்டி பழுது பிரையாங்குப்பம் பகுதியினர் அவதி
மேல்நிலை குடிநீர் தொட்டி பழுது பிரையாங்குப்பம் பகுதியினர் அவதி
ADDED : டிச 23, 2024 02:13 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், பிரையாங்கும் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார். இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையோரம் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியாகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2012 - 13ல், ஊரக வளர்ச்சி கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், 28,000 ரூபாய் மதிப்பில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பின், 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், பராமரிப்பில்லாததால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பில்லர்கள் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது பகுதிவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாமலேயே குடிநீர் வழங்கப்படுவதாகவும் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தொட்டியில் வால்வு பகுதியில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரையாங்குப்பம் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

