sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரி மனு

/

கோவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரி மனு

கோவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரி மனு

கோவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரி மனு


ADDED : ஜூன் 16, 2025 11:35 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி முருகன் கோவில் மற்றும் 29 உபகோவில்களில், 230க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், 17 ஆண்டுகளுக்கு மேல் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கோவில் நிர்வாகம் பதவி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. நேற்று தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கம், திருத்தணி கிளை சார்பில் தலைவர் குப்பன் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், கோவில் இணை ஆணையர் ரமணியை நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 17 ஆண்டுகள் பணிபுரிந்து நிறைவடைந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தகுதி அடிப்படையில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் வழங்கும் சிறப்பு ஊதியம், அந்தந்த ஆண்டிலேயே வழங்க வேண்டும்.

கோவில் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தாக்குதல் நடந்தால், கோவில் உயரதிகாரி வாயிலாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற இணை ஆணையர் ரமணி, ''விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.






      Dinamalar
      Follow us