sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

/

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 05, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:வயலுார் பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்கிருந்து, சூரகாபுரம் வழியாக மும்மடிக்குப்பம், முதுகூர் செல்லும் 4 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையிடம், ஒன்றிய நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். தற்போது, இச்சாலை மிகவும் சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால், இச்சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது. இதனால், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us