/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 05, 2025 01:25 AM

கடம்பத்துார்:வயலுார் பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்கிருந்து, சூரகாபுரம் வழியாக மும்மடிக்குப்பம், முதுகூர் செல்லும் 4 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையிடம், ஒன்றிய நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். தற்போது, இச்சாலை மிகவும் சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால், இச்சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது. இதனால், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.