/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூன் 16, 2025 11:33 PM
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் 20ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், வரும் 20ம் தேதி காலை 10:00 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் 10 வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்தவர்கள் பங்கேற்கலாம்.
தனியார் துறையில் 'அசெம்ப்ளி லைன் ஆப்பரேட்டர், ஷீட் மெட்டல் வொர்க்கர், மிஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப்பணி உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.