/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம்: 471 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம்: 471 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜன 27, 2025 11:25 PM
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், 471 மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக 124, சமூக பாதுகாப்பு திட்டம் 48, வேலை வாய்ப்பு வேண்டி 72, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் கோரி 57, இதர துறை 170 என, மொத்தம் 471 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 20,000 ரூபாய் மதிப்பிலான நவீன தையல் இயந்திரத்தினை, கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், தனித் துணை கலெக்டர் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.