/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 532 மனுக்கள் ஏற்பு
ADDED : மே 12, 2025 11:28 PM
திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த பொதுமக்கள், நிலம் சம்பந்தமாக - 125, சமூக பாதுகாப்பு திட்டம் - 69, வேலைவாய்ப்பு கோரி - 89, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் - 96 மற்றும் இதர துறை - 189 என, மொத்தம் 532 மனுக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.