/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெத்திக்குப்பத்தில் 8ல் மக்கள் தொடர்பு முகாம்
/
பெத்திக்குப்பத்தில் 8ல் மக்கள் தொடர்பு முகாம்
ADDED : ஜன 02, 2025 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பெத்திக்குப்பம் கிராமத்தில், வரும் 8ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திக்குப்பம் கிராமத்தில், கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், வரும் 8ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.
அது சமயம் அனைத்து துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையினை கலெக்டரிடம் மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.