sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் நீர் திறப்பு

/

சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் நீர் திறப்பு

சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் நீர் திறப்பு

சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் நீர் திறப்பு


ADDED : அக் 15, 2024 02:21 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலத்தில் உருவாகி தமிழகத்தை நோக்கி வரும் ஆரணி ஆற்றில், தமிழக - -ஆந்திர எல்லையில் சுருட்டப்பள்ளி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

கடந்த, 1954ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை உள்ளிட்ட, 15 ஏரிகளுக்கு உபரிநீர் திறந்து விட ஐந்து மதகுகள் உள்ளன.

சில தினங்களாக சுருட்டப்பள்ளி மற்றும் நந்தனம் மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மழைநீர் ஆரணி ஆற்றில் கலந்து சுருட்டப்பள்ளி அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியதை தொடர்ந்து நேற்று காலை, 11:00 மணிக்கு சுருட்டப்பள்ளி அணைக்கட்டில் இருந்து ஐந்து மதகுகள் வாயிலாக வினாடிக்கு, 300 கன அடி வீதம் திறக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us