sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

/

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ADDED : ஜன 03, 2025 10:40 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை அதிரடியாக அகற்றியது.

சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வாகனங்கள், பூந்தமல்லி, மணவாளநகர் வழியாக, திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றன.

இந்த சாலைகளின் இருபுறமும் உள்ள கடைக்காரர்கள், முகப்பு பகுதியில் தங்கள் கடையின் விளம்பர பலகையினை சாலை போக்குவரத்துக்கு இடையூறாக அமைத்துள்ளனர்.

இதனால், கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்லும் போது, இடையூறு ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என, நெடுஞ்சாலை துறையினர் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை வழங்கினர்.

இருப்பினும் ஆக்கிரமிப்பு பகுதியை கடைக்காரர்கள் அகற்றாத நிலையில், நேற்று காலை நெடுஞ்சாலை ஜே.சி.பி.,யுடன் வந்தனர். காமராஜர் சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை, சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு பகுதியினை அகற்றும் பணியை துவக்கினர்.

சிலர், அதிகாரிகள் வந்ததும், தாங்களாகவே தங்கள் கடை முன் உள்ள 'ஷெட்களை' அகற்றினர். ஒரு சில கடைக்காரர்களுடன் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.






      Dinamalar
      Follow us