sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

/

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஆக 22, 2025 02:29 AM

Google News

ADDED : ஆக 22, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி இடையே நான்கு வழிச் சாலையில், தனியார் ஆக்கிரமிப்பை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.

ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், இணைப்பு சாலை வழியே, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இருவழிச் சாலையாக உள்ள இந்த மார்க்கத்தில், சில இடங்களில் சாலை குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை தவிர்க்க இந்த மார்க்கத்தில் நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவெடுத்து, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து பெரிஞ்சேரி வரை, 2.6 கி.மீ.,க்கு நான்குவழிச் சாலையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 30 மீட்டர் அகலத்தில் மைய தடுப்புடன் சாலை அமைக்கும் பணி, கடந்த ஏப்., மாதம் துவங்கியது.

இந்த சாலைப் பணிக்காக, 50க்கும் மேற்பட்ட மரங்கள், 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. இந்த பணியில், 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், போந்தவாக்கம் கிராமத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்த இடம் குறித்த வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்தது.

ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த ஓடுகளை அதன் உரிமையாளர் அகற்றினார்.

பின், சாலைப் பணி துவங்கியது.






      Dinamalar
      Follow us