/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 16, 2024 01:51 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சி பேரம்பாக்கம் சாலையில் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளன.
இதனால், கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக செல்ல வேண்டிய மழைநீர், கழிவுநீருடன் கலந்து சாலையில் வழிந்தோடும்.
எனவே, பருவமழை தீவிரமடைவதற்குள் பேரம்பாக்கம் வழியாக செல்லும் கால்வாயை துார்வாரி சீரமைக்க, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.