/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழுதாவூரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
/
தொழுதாவூரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
தொழுதாவூரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
தொழுதாவூரில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : நவ 21, 2024 09:01 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியில்,மேட்டுத்தெரு, கலைஞர் நகர், பழைய காலனி, பள்ளத்தெருவில், 400க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு அரசு நடுநிலைப் பள்ளி அருகே ரேஷன் கடை கட்டடம் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் குட்டை புறம்போக்கில் கட்டடப்பட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது.
ரேஷன் கடை அதே பகுதியில் உள்ள கிராம சேவை மையத்தில் இயங்கி வருகிறது.
இந்த கட்டடத்தில் போதிய இட வசதி இல்லை, கட்டடம் பழுதடைந்து உள்ளதால் ரேஷனுக்கு வந்து பொருட்களை வாங்கி செல்லும் நுகர்வோர் அச்சமடைந்துள்ளனர்.
எனவே தொழுதாவூர் கிராமத்தில் புதிய ரேஷன் கட்டடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.