sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் ஆய்வக வசதி ஏற்படுத்த கோரிக்கை

/

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் ஆய்வக வசதி ஏற்படுத்த கோரிக்கை

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் ஆய்வக வசதி ஏற்படுத்த கோரிக்கை

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் ஆய்வக வசதி ஏற்படுத்த கோரிக்கை


ADDED : மார் 16, 2025 09:31 PM

Google News

ADDED : மார் 16, 2025 09:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு, மாணவர்கள் கல்வி கற்க, 25 வகுப்பறைகள் உள்ளன. இந்த வகுப்பறைகள் போதுமானதாக இல்லை.

இங்கு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயிரியல் பாடப்பிரிவு உள்ளது. இதில், உட்பிரிவுகளாக தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ளன. இந்த பாடங்களுக்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஆய்வக வசதி கட்டமைப்பு ஏற்படுத்தவில்லை.

இதனால், மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு வகுப்பறை ஆய்வகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இன்றி பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், வகுப்பறையை ஆய்வகத்திற்கு பயன்படுத்துவதால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேலநிலைப் பள்ளியில் உள்ள உயிரியல் பாடப்பிரிவிற்கு ஆய்வகம் அமைக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us