sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சின்னம்மாபேட்டை ஜங்ஷனில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

/

சின்னம்மாபேட்டை ஜங்ஷனில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சின்னம்மாபேட்டை ஜங்ஷனில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சின்னம்மாபேட்டை ஜங்ஷனில் வேகத்தடை அமைக்க கோரிக்கை


ADDED : மார் 05, 2025 02:02 AM

Google News

ADDED : மார் 05, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலை, 18 கி.மீ., தூரம் உடையது. இச்சாலையை ஒட்டி முத்துக்கொண்டாபுரம், கூர்மவிலாசபுரம், சின்னம்மாபேட்டை, பெரியகளக்காட்டூர் என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பள்ளி உள்ளிட்ட இடங்களில், நெடுஞ்சாலைத்துறை துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர்.

இந்நிலையில், திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ள சின்னம்மாபேட்டை ஜங்ஷன் பகுதியில் வேகத்தடை இன்றி உள்ளது. இந்த ஜங்ஷன் வழியாக அரக்கோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம் செல்லும் பிரிவு சாலை உள்ளது.

மேலும், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும் இச்சாலையில் ஆங்காங்கே வளைவும் உள்ளது. இதையறியாமல், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில், இச்சாலையில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us