sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புளியங்குண்டாவில் சுகாதாரவளாகம் அமைக்க கோரிக்கை

/

புளியங்குண்டாவில் சுகாதாரவளாகம் அமைக்க கோரிக்கை

புளியங்குண்டாவில் சுகாதாரவளாகம் அமைக்க கோரிக்கை

புளியங்குண்டாவில் சுகாதாரவளாகம் அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 08, 2024 11:25 PM

Google News

ADDED : பிப் 08, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது புளியங்குண்டா கிராமம். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் இல்லாததால், பெண்கள் இயற்கை உபாதையை திறந்த வெளியில் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பெண்கள், குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தங்கள் பகுதியில் பொது கழிப்பிட வசதி செய்து தரக்கோரி, பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us