/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 25, 2025 01:12 AM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் உள்ள லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவரைப்பேட்டை - சத்தியவேடு நெடுஞ்சாலையில், ஐயர்கண்டிகை கிராமம் அருகே லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.
இந்த பேருந்து நிறுத்தத்தை லட்சுமிபுரம், ஆர்.என்.கண்டிகை, ஏ.என்.குப்பம் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இங்கு, பயணியரின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப் பட்டது.
இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகளுக்காக, நெடுஞ்சாலை துறையினர் நிழற்குடையை அகற்றினர். பணி முடிந்து ஓராண்டாகியும், தற்போது வரை பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை.
எனவே, பயணியர் நலன் கருதி, உடனடியாக லட்சுமிபுரம் நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.