sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

/

லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

லட்சுமிபுரத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை


ADDED : ஆக 25, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் உள்ள லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவரைப்பேட்டை - சத்தியவேடு நெடுஞ்சாலையில், ஐயர்கண்டிகை கிராமம் அருகே லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.

இந்த பேருந்து நிறுத்தத்தை லட்சுமிபுரம், ஆர்.என்.கண்டிகை, ஏ.என்.குப்பம் ஆகிய கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இங்கு, பயணியரின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப் பட்டது.

இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகளுக்காக, நெடுஞ்சாலை துறையினர் நிழற்குடையை அகற்றினர். பணி முடிந்து ஓராண்டாகியும், தற்போது வரை பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை.

எனவே, பயணியர் நலன் கருதி, உடனடியாக லட்சுமிபுரம் நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us