sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம் ரூ.11 லட்சம் நுாதன மோசடி

/

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம் ரூ.11 லட்சம் நுாதன மோசடி

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம் ரூ.11 லட்சம் நுாதன மோசடி

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம் ரூ.11 லட்சம் நுாதன மோசடி

1


ADDED : ஜூலை 30, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்; ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,விடம், ஏ.டி. எம்., கார்டை மாற்றி கொடுத்து, 11 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மணவூரை சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., ஆனந்தன், 65. ஜூலை, 15ல் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முயன்ற போது, அங்கிருந்த ஒருவர் அவருக்கு உதவி செய்வதுபோல, ஆனந்தனின் ஏ.டி.எம்., கார்டு, பின் நம்பரை பெற்று, பணம் எடுத்து கொடுத்தார்.

பின், ஏ.டி.எம்., கார்டை ஆனந்தனிடம் கொடுத்தார். ஆனந்தன் வீடு திரும்பிய பின், மொபைல்போனை பார்த்த போது, அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக பல குறுந்தகவல்கள் இருந்தன. அதிர்ச்சியடைந்த ஆனந்தன், தன்னிடமிருந்த ஏ.டி.எம்., கார்டை பார்த்தபோது, அது அவருடையது இல்லை என, தெரிந்தது.

அவரது ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 11 லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்தது. உதவி செய்த நபர், கார்டை மாற்றிக் கொடுத்துள்ளார். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us