sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

/

பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை


ADDED : ஜூன் 26, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு, பழவேற்காடு பகுதியில் நடைபெறும் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில், அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் போல் வந்த, 11 பேரை பாதுகாப்பு குழுவினர் சுற்று வளைத்து பிடித்தனர்.

கடந்த 2008ல், மும்பை வழியாக வந்த பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, ஆறு மாதத்திற்கு ஒருமுறை கடலோர மாவட்டங்களில், 'சாகர் கவாச்' தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேற்று பழவேற்காடிலும் நடந்தது. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு காவல்துறை, கப்பற்படை ஆகிய துறைகள் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.

பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளிலும், கலங்கரை விளக்கம், தோணிரவு, எண்ணுார் காமராஜர் மற்றும் அதானி துறைமுக பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை, கடல் வழியாக தீவிரவாதிகள் போல் வேடமணிந்து, படகில் வந்த 11 பேரை, கடற்கரையில் பாதுகாப்பு பணியில் இருந்த குழுவினர் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு டம்மி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us