நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தாணிப்பூண்டி சந்திப்பில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுனரான ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த நேதாஜி, 43, என்பவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.