sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை

/

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மருந்து விற்பனை


ADDED : மே 26, 2025 11:31 PM

Google News

ADDED : மே 26, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு :திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 300க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர அரசு அனுமதியுடனும் தனியார் கிளினிக், மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

இங்கு வரும் நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், மாவட்டத்தில் உள்ள சில கிராம பகதிகளில், மருத்துவம் படிக்காமலேயே சிலர் மருந்து கடைகளிலும், பெட்டி கடைகளிலும் சிகிச்சை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் மருந்து கடை வைத்திருக்கும் சிலர், மருத்துவர்கள் அனுமதி இல்லாமல் ஊசி போடுவது, மருத்துவர் பரிந்துரை செய்யும் சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்குவதாக மருத்துவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

எனவே, மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிகமாக விற்பனை செய்யப்படும் காப் சிரப், வலி நிவாரணி மாத்திரை, துாக்க மாத்திரை உள்ளிட்டவை கடைகளில் விற்கப்படுவதை மருத்துவ துறை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என, அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us