sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏழு ஆண்டுகளாக கடைகளை ஏலம் விடாமல்... இழுபறி:  அரசியல் குறுக்கீட்டால் திணறும் இரு துறைகள்

/

ஏழு ஆண்டுகளாக கடைகளை ஏலம் விடாமல்... இழுபறி:  அரசியல் குறுக்கீட்டால் திணறும் இரு துறைகள்

ஏழு ஆண்டுகளாக கடைகளை ஏலம் விடாமல்... இழுபறி:  அரசியல் குறுக்கீட்டால் திணறும் இரு துறைகள்

ஏழு ஆண்டுகளாக கடைகளை ஏலம் விடாமல்... இழுபறி:  அரசியல் குறுக்கீட்டால் திணறும் இரு துறைகள்


ADDED : நவ 02, 2025 10:17 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனை சாவடி அருகே உள்ள கடைகள் அரசியல் குறுக்கீடுகளால், ஏழு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. கடைகளை ஏலம் விடுவதில், பொது பணித்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இடையே இழுபறி நீடிக்கிறது. சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், 2018ம் ஆண்டு, ஜூன் மாதம், எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டன.

ஆந்திரா நோக்கிய திசையில் ஒன்றும், தமிழகம் நோக்கிய திசையில் ஒன்றும் என இரு சோதனைச்சாடிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

அதில், நகலகம், உணவகம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் மருந்து கடை வைப்பதற்காக, ஒரு சோதனைச்சாவடிக்கு தல ஐந்து கடைகள் என, மொத்தம், 10 கடைகள் நிறுவப்பட்டன.

சோதனைச்சாவடி திறந்த வருடமே, அந்த கடைகளுக்கான பொது ஏலத்தை பொது பணித்துறையினர் அறிவித்து நடத்தினர். அப்போது, ஏலம் எடுப்பதில், அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மறு தேதி அறிவிக்கப்படாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதன் பின் 2022ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், ஆகஸ்ட் மாதம் பொது ஏலம் நடைபெற்றது. அப்போதும், கடைகளை பிரிப்பதில், அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பிரச்னை காரணமாக, ஏலம் ரத்து செய்யப்பட்டது.

ஆவண தணிக்கை அரசியல் தலையீடுகள் காரணமாக, கடந்த ஏழு ஆண்டு காலமாக, 10 கடைகளையும் ஏலம் விட முடியாமல் பொது பணித்துறையினர் திணறி வருகின்றனர்.

அந்த சோதனைச்சாவடிகளில், தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளை நிறுத்தி, ஆவண தணிக்கை செய்யப்படுகிறது. பல மணி நேரம் லாரிகள் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதன் ஓட்டுநர்கள். ஆவணங்களை நகல் எடுப்பதற்கும், காத்திருக்கும் நேரத்தில், உணவு மற்றும் தேநீர் அருந்த, 3 கி.மீ., தொலைவில் உள்ள எளாவூர் பஜார் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

சோதனைச்சாவடி வளாகத்தில் கடைகள் இருந்தும், அவை திறக்கப்படாத நிலையில், அங்கு வரும் வாகன ஓட்டிகள், மற்றொரு வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு எளாவூர் பஜார் பகுதிக்கு சென்று வருவதால் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.

பொது பணித்துறையினரால் பொது ஏலம் மட்டுமே விடமுடியும். அப்படி பொது ஏலம் விட்டால், அரசியல் கட்சியினர் குறுக்கீடுகளை சமாளிக்க முடியாது என்பதை நன்கு தெரிந்துக்கொண்டனர்.

வேறு வழியின்றி, கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் கருதி, ஏலம் விடும் பொறுப்பை இரு மாதங்களுக்கு முன் போக்குவரத்து துறையிடம், பொது பணித்துறையினர் ஒப்படைத்தனர்.

அதன் மீதான கடிதம் ஒன்றை திருவள்ளூர் மாவட்ட பொது பணித்துறை செயற்பொறியாளர் சார்பில், செங்குன்றம் வட்டார போக்குவத்து அலுவலருக்கு அனுப்பப்பட்டது.

அச்சுறுத்தல் அந்த கடிதத்தில், 'தலா ஒரு கடைக்கு, 2,513 ரூபாய் மாத வாடகை நிர்ணயம் செய்து, குத்தகைதாரரை போக்குவரத்து துறையினரே தேர்வு செய்து மாதந்தோறும், 10 கடைகளுக்கான, மாத வாடகையாக, 25,130 ரூபாய் வாடகை தொகையை பொது பணித்துறையின் கணக்கில் செலுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இ-டெண்டர் விடலாம் என போக்குவரத்து துறையினர் திட்டமிட்ட நிலையில், அதிலும் அரசியல் குறுக்கீடுகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் இருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சுகின்றனர்.

இதனால், ஏலம் விடும் பொறுப்பை போக்குவரத்து துறையினர் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடைகளுக்கான வாடகையை வசூலித்து, பொது பணித்துறையினரிடம் போக்குவரத்து துறையினர் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வாடகை பெறும் அவர்களே நேரடியாக ஏலம் விடுவதுதான் சரியாக இருக்கும் என தெரிவித்திருக்கிறோம். இருப்பினும் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு ஏலம் விடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us