/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்
/
திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்
திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்
திருத்தணி கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்
ADDED : ஆக 09, 2025 01:37 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் மலைப்படிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், வரும் 14ம் தேதி முதல், 18ம் தேதி வரை, ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப்பெருமானை வழிபட்டு, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர்.
பெரும்பாலான பக்தர்கள் காவடிகளுடன், சரவணப்பொய்கை திருக்குளம், மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய பகுதிகளுக்கு வந்து, குளத்தில் புனித நீராடிய பின் காவடிகளுக்கு பூஜை நடத்துவர். பின், மலைக்கோவிலுக்கு படிகள் வழியாக நடந்து செல்வர்.
இந்நிலையில், மலைப்படிகளில் சிலர் ஆக்கிரமித்து, முருகன் படக்கடைகள், பஞ்சாமிர்தம், தேங்காய், பொரி, கயிறு போன்ற பூஜை பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
படிகளில் ஆக்கிரமித்துள்ள கடைகளால், காவடிகளுடன் பக்தர்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் உத்தரவின்படி, மலைப்படிகளில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றும் பணியில், நேற்று கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும், 12ம் தேதியும், மலைப்படிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.