/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆன்லைனில் போதை பவுடர் விற்பனை எஸ்.ஐ., கணவர் உள்பட 5 பேர் கைது
/
ஆன்லைனில் போதை பவுடர் விற்பனை எஸ்.ஐ., கணவர் உள்பட 5 பேர் கைது
ஆன்லைனில் போதை பவுடர் விற்பனை எஸ்.ஐ., கணவர் உள்பட 5 பேர் கைது
ஆன்லைனில் போதை பவுடர் விற்பனை எஸ்.ஐ., கணவர் உள்பட 5 பேர் கைது
ADDED : நவ 21, 2024 12:32 AM

புழல்:பாடி மேம்பாலம், பிரபல துணிக்கடை அருகே, சந்தேகப்படும்படியாக நின்ற ஐந்து பேரை, புழல் போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆன்லைன் வழியாக ஆர்டர் பெற்று, போதைப் பொருள் விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த, உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணி பெண் எஸ்.ஐ.,யின் கணவர் குமரவேல், 46, புழல் காவாங்கரையை சேர்ந்த தீபேஷ், 24, பார்த்திபன், 24, ஓட்டேரியை சேர்ந்த அமீர்பாஷா, 23, சுபாஷ், 27 ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 3 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
***