sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தேசிய நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து கையெழுத்து இயக்கம்

/

தேசிய நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து கையெழுத்து இயக்கம்

தேசிய நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து கையெழுத்து இயக்கம்

தேசிய நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து கையெழுத்து இயக்கம்


ADDED : செப் 17, 2025 01:59 AM

Google News

ADDED : செப் 17, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:விவசாயிகள், வியாபாரிகள் நலனை கருத்தில் கொள்ளாத தேசிய நெடுஞ்சாலை துறையினரின் பணிகளை கண்டித்துகனகம்மாசத்திரம் பஜாரில், 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

கனகம்மாசத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணி தற்போது 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கனகம்மாசத்திரம் செல்லும் சாலையில் இடைவெளி விடாமல் டிவைடர் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் கனகம்மாசத்திரம் நகரத்தின் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் கனகம்மாசத்திரம் நகர வாழ்விடத்தை பாதுகாத்திட வேண்டும்.

சுற்றியுள்ள 20 கிராம மக்களின் போக்கு வரத்தை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், வியாபாரிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கையை கண்டித்து நேற்று கனகம்மாசத்திரம் பஜாரில் ஊர்வலமாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட செயலர் ஸ்ரீநாத், மற்றும்ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us