
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி,பொன்னேரி, அன்னை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் குமார், 48.இவரது மகள் ஜோஷிதா, 24. எம்.டெக்., படித்து வந்த கல்லுாரி மாணவி.
நேற்று மாலை, வீட்டில்இருந்து பொன்னேரி பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு, தலைக்கவசம் அணியாமல், 'ஹோண்டாஆக்டிவா' பைக்கில், பொன்னேரி - செங்குன்றம்சாலை வழியாகவீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அதே சாலையில் உள்ள மூகாம்பிகை நகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று, ஜோஷிதாவின் பைக் மீதுமோதியது.
இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, ஜோஷிதா,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய, லாரி டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.