/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடன்
/
விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடன்
ADDED : டிச 11, 2024 09:17 PM
திருவள்ளூர்:நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின்கீழ், விவசாய நிலம் வாங்குவதற்கு, 'தாட்கோ' மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின்கீழ், விவசாய நிலம் வாங்குவதற்கு 'தாட்கோ' மானியத்துடன் கிரைய தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாயிலாக, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
தகுதியுள்ள பயனாளிகள், www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு திருவள்ளூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.