/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதரில் மறைந்துள்ள சுடுகாடு முருக்கம்பட்டில் அவதி
/
புதரில் மறைந்துள்ள சுடுகாடு முருக்கம்பட்டில் அவதி
ADDED : நவ 16, 2024 01:41 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர் கிராமத்திற்கு கிழக்கு பகுதியில், இரண்டு ஏக்கர் நிலத்தில் சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சுடுகாட்டில் எரிமேடை, சுற்றுசுவர் மற்றும் ஆழ்துளை கிணறு மற்றும் கைபம்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தியுள்ளன. இந்த சுடுகாட்டில் கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை எரித்தும், புதைத்தும் வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது சுடுகாடு மற்றும் அதனை சுற்றியும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.