sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஜாத்திரை விழா துவக்கம் வரும் 29ல் அம்மன் வீதியுலா

/

ஜாத்திரை விழா துவக்கம் வரும் 29ல் அம்மன் வீதியுலா

ஜாத்திரை விழா துவக்கம் வரும் 29ல் அம்மன் வீதியுலா

ஜாத்திரை விழா துவக்கம் வரும் 29ல் அம்மன் வீதியுலா


ADDED : ஜூலை 22, 2025 09:22 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் ஜாத்திரை விழா துவங்கியது.

திருத்தணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில், ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை விழா ஒரு வாரம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஜாத்திரை விழா நேற்று காலை கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கங்கையம்மன் மற்றும் சக்தியம்மன் ஆகிய கோவில்களில், மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கூழ்வார்த்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்றனர்.

வரும் 28ம் தேதி பூங்கரகம் ஊர்வலமும், வரும் 29ம் தேதி ஜாத்திரை விழா மற்றும் கங்கையம்மன் வீதியுலாவும் நடக்கிறது. இரவு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாமண்டூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us