sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உங்களை தேடி திட்டம் ஆவடியில் 25ல் நடக்கிறது

/

உங்களை தேடி திட்டம் ஆவடியில் 25ல் நடக்கிறது

உங்களை தேடி திட்டம் ஆவடியில் 25ல் நடக்கிறது

உங்களை தேடி திட்டம் ஆவடியில் 25ல் நடக்கிறது


ADDED : ஜூன் 17, 2025 09:34 PM

Google News

ADDED : ஜூன் 17, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தில், வரும் 25ம் தேதி ஆவடியில் கள ஆய்வில் கலெக்டர் பங்கேற்க உள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தை முதல்வர் அறிவித்திருந்தார். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதம் மூன்றாவது புதன் கிழமையன்று, ஒரு நாள் வட்ட அளவில் கலெக்டர் தங்கி முகாமிட்டு, கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

கள ஆய்வின்போது, அரசு அலுவலகங்களை பார்வையிட்டும், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தும், அரசின் அனைத்து நல திட்டம், சேவைகள் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த மாதம், வரும் 25ம் தேதி ஆவடி வட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us