sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முதல்வர் திறந்து 4 மாதங்களாகியும் பயனுக்கு வராத நவீன எரிவாயு தகனமேடை

/

முதல்வர் திறந்து 4 மாதங்களாகியும் பயனுக்கு வராத நவீன எரிவாயு தகனமேடை

முதல்வர் திறந்து 4 மாதங்களாகியும் பயனுக்கு வராத நவீன எரிவாயு தகனமேடை

முதல்வர் திறந்து 4 மாதங்களாகியும் பயனுக்கு வராத நவீன எரிவாயு தகனமேடை


ADDED : ஜன 13, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி, பொன்னேரி நகராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக, திருஆயர்பாடி கள்ளுக்கடைமேடு சுடுகாடு பகுதியில், 2022ல், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 1.44 கோடி ரூபாயில், நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.

எரிவாயு உருளை பொருத்தும் இடம், புகைப்போக்கி குழாய், ஆம்புலன்ஸ் வந்து நிற்க இடம், எரிவாயு சேமிப்பு கிடங்கு, ஜெனரேட்டர் அறை, அலுவலக அறை என, மொத்தம், 2,800 சதுர அடியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சடலங்களை எரிவாயு வாயிலாக எரிப்பதற்கான இயந்திரங்கள், டிராலி, எரிவாயு குழாய் இணைப்பு, மின்இணைப்பு, சுற்றுச்சுவர், பாதைவசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த 2023, ஜூலை மாதம் கட்டுமான பணிகள் முடிந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்காக காத்திருந்தது. கடந்த ஆண்டு, மார்ச் மாதம் அதற்கான அனுமதியும் கிடைத்தது.

கடந்த, ஆகஸ்ட் மாதம், 12ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சில் இதை பயனுக்கு கொண்டு வந்தார்.

முதல்வர் திறந்து வைத்து, நான்கு மாதங்கள் முடிந்தும் இதுவரை திட்டம் பயனுக்கு வராமல், பூட்டியே கிடக்கிறது.

தனியார் நிறுவனம் வாயிலாக எரிவாயு தகனமேடையை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திட்டம் பயனுக்கு வராமல் முடங்கி கிடப்பதால், அதற்காக செலவிட்ட நிதியும் வீணாகி வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் எரிவாயு தகன மேடையை பயனுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us