/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பாச்சூரில் பயணியர் நிழற்குடை புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
/
திருப்பாச்சூரில் பயணியர் நிழற்குடை புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
திருப்பாச்சூரில் பயணியர் நிழற்குடை புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
திருப்பாச்சூரில் பயணியர் நிழற்குடை புதருக்குள் மாயமாகி வரும் அவலம்
ADDED : ஜன 03, 2025 02:05 AM

திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். இங்கிருந்து, கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில், நியாய விலைக் கடை அருகே மற்றும் திருவள்ளூர், திருத்தணி செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் என, இரண்டு பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிழற்குடைகளை பயன்படுத்தி பயணியர், திருவள்ளூர் மற்றும் கடம்பத்துார் சென்று வருகின்றனர். இந்த நிழற்குடைகளின் முன்புறம் முட்செடிகள் வளர்ந்து கிடப்பதால், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நிழற்குடை அருகே நியாய விலைக் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பகுதிவாசிகளும், விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் சிரமப்பட்டு வருகின்றனர்.
அருகிலேயே ஊராட்சி அலுவலகம் இருந்தும், நிழற்குடைகளை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பகுதிவாசிகள் மற்றும் பயணியரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து, நிழற்குடைகளின் முன்புறம் உள்ள முட்புதர்களை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, , பகுதிவாசிகள் மற்றும் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பூண்டி ஒன்றிய அதிகாரி கூறுகையில், ''திருப்பாச்சூர் ஊராட்சியில் ஆய்வு செய்து நிழற்குடையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.