sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்

/

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு 4வது முறையாக தொடரும் அவலம்


ADDED : அக் 27, 2025 01:14 AM

Google News

ADDED : அக் 27, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை, தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருத்தணி ஒன்றியம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 50. இவர், நேற்று காலை தனக்கு சொந்தமான பசுமாட்டை, தெக்களூர் ஏரிக்கரை அருகே உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

அப்போது, அங்கிருந்த விவசாய கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது. பசு மாடு கத்தும் சத்தம் கேட்டதும், கஜேந்திரன் கிணற்று பகுதிக்கு விரைந்து சென்றார்.

கிணற்றில் இருந்து ஏற முடியாமல் மாடு தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து, திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.

கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மாட்டிற்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விவசாய தரைமட்ட கிணற்றில், நான்கு மாதங்களில் மூன்று மாடுகள் தவறி விழுந்து உயிருடன் மீட்டுள்ளதாக, தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us