sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

/

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்


ADDED : ஆக 20, 2025 10:48 PM

Google News

ADDED : ஆக 20, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, அதற்கான பாலாலயம் நடந்தது.

பொன்னேரி, ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது.

இக்கோவிலில் நீண்டகாலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்ததால், பக்தர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இதையடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனர்.

அதற்கான பாலாலய பூஜை நேற்று விமரிசையாக நடந்தது.

அத்தி மர பலகைகள், அகத்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளின் உருவங்கள் வரைந்து, அவற்றிற்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோவில் கோபுரங்கள், சுற்றுச்சுவர், சன்னிதிகள் ஆகியவை புனரமைப்பதற்கான திருப்பணிகள் உடனடியாக துவங்கி, விரைவாக பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us