sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 துணை சுகாதார நிலையம் மதுக்கூடமாக மாறிய அவலம்

/

 துணை சுகாதார நிலையம் மதுக்கூடமாக மாறிய அவலம்

 துணை சுகாதார நிலையம் மதுக்கூடமாக மாறிய அவலம்

 துணை சுகாதார நிலையம் மதுக்கூடமாக மாறிய அவலம்


ADDED : நவ 15, 2025 10:07 PM

Google News

ADDED : நவ 15, 2025 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்நல்லாத்துார்: துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மதுக்கூடமாக மாறி வருகிறது.

கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் மேல்நல்லாத்துார் மற்றும் சுற்றியுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த சு காதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. மேலும், சுகாதார நிலையத்தை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால், பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

சுகாதார நிலையத்தை சுற்றி காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவை குவிந்துள்ளன. இதனால், சுகாதார நிலையத்திற்கு வருவோர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, துணை சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us