sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி

/

விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி

விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி

விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி


ADDED : பிப் 09, 2025 12:54 AM

Google News

ADDED : பிப் 09, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சி, தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 27. கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி 24. கடந்த வாரம் ரேவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 5ம் தேதி சிகிச்சை முடிந்து ரேவதி, கணவர் அருண்குமார் உடன், 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி வந்தார்.

கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்து, இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி, அருண்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்தார். அருண்குமார் படுகாயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us