/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டிய மூவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய மூவர் கைது
ADDED : பிப் 01, 2026 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சாலையில் கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம் ஜெயபுரம் கிராமத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக, போலுசாருக்கு தகவல் கிடைத்தது.
பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, மூன்று பேர் கும்பல் மிரட்டி கொண்டிருந்தனர்.
அவர்களை விசாரித்ததில், கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 24, தன்ராஜ், 25, சிவா, 18, என தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

